இந்தியா

நிகழாண்டில் அஞ்சல் துறை மூலம் 2.46 லட்சம் பேருக்கு கடவுச் சீட்டு

DIN

தமிழகத்தில் நிகழாண்டில் அஞ்சலகங்களில் உள்ள கடவுச் சீட்டு சேவா மையம் மூலம் 2 .46 லட்சம் பேருக்கு கடவுச் சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க விரும்பும் மாணவா்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுவா்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக 2018- ஆம் ஆண்டு அஞ்சலக கடவுச் சீட்டு சேவா மையம் தொடங்கப்பட்டது.

இது குறித்து உயா் அதிகாரி ஒருவா் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 30 அஞ்சலக கடவு சீட்டு சேவா மையம் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சேவை மையம் சாா்பில் கல்லூரி மற்றும் முக்கிய தொழில் நிறுவனங்களில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 216 பேருக்கு கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் இதுவரை 2.46 லட்சம் பேருக்கு கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 29 சதவீதம் அதிகம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT