இந்தியா

ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெறும்: அனுராக் தாக்குர்

DIN

ஜெய்ப்பூர்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், ராஜஸ்தானில் பாஜக அறுதி பெரும்பான்மையில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டிச.3 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

மேலும் அவர், “ஊழல் ஆட்சியில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்கிற மக்களின் காத்திருப்பு நாளையோடு முடிந்தது. காங்கிரஸின் உண்மையான முகம் நாளை வெளிப்படும். மக்களுக்கான நல்லாட்சி, பாஜக ஆட்சியாக அமையும். மக்களுக்கு வேண்டிய வளர்ச்சியும் இரண்டு மடங்கு ஆற்றல் கொண்ட ஆட்சியை ராஜஸ்தானில் பாஜக கொண்டுவரும்” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இறந்ததால் அந்தத் தொகுதியில் மட்டும் வாக்குப் பதிவு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆங்கிலம் முதலிடம்..பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14% தேர்ச்சி!

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

10ம் வகுப்பு: மறுதேர்வு, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் எப்போது?

10ம் வகுப்பு தேர்வு முடிவு: 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

SCROLL FOR NEXT