கோப்புப்படம். 
இந்தியா

பேருந்து மீது துப்பாக்கிச்சூடு: 6 குண்டுகள் பாய்ந்த பெண் கவலைக்கிடம்!

காஷ்மீரில் பேருந்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக ஆறு குண்டுகளை தனது உடம்பில் வாங்கிய பெண், கராச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DIN

காஷ்மீர் சிலாஸ் நகரத்தில் பேருந்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக ஆறு குண்டுகளை தனது உடம்பில் வாங்கிய பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் கராச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  

தாக்குதலுக்கு உள்ளான பெண் இஸ்லாமாபாத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேல் சிகிச்சைக்காக கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவரப் பட்டார்.

அருகிலிருந்த மலைகளிலிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கட்டுப்பாடை இழந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் போது அந்தப் பெண்ணிற்கு முதுகு தண்டுவட பகுதியில் நான்கு குண்டுகளும், வயிறு மற்றும் கல்லீரலில் பகுதியில் இரண்டு குண்டுகளும் பாய்ந்துள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர், 21 பயணிகள் காயமடைந்துள்ளனர். 

இதையும் படிக்க: தெலங்கானா எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

இந்த தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் ஷாம்ஸ் லோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் இந்தப் பகுதியில் சமீபகாலமாக தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT