முகப்பு
இந்தியா

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 4 ஜனவரி, 2023 at 3:36 PM
சோனியா காந்தி
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:07 AM

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி உடனிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நேற்று முதலே சுவாசத் தொற்றினால் சோனியா காந்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

தற்போது உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்று வரும் நிலையில், சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு பிரியங்கா காந்தி மீண்டும் நடைப்பயணத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.