இந்தியா

ஹரியாணாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

DIN

ஹரியாணாவில் உள்ள ரோஹ்தக் மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதால், அப்பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.

ரோஹ்தக்-ஜிந்த் ரயில் பாதையில் சமர்கோபால்பூர் கிராமத்திற்கு அருகில்  சரக்கு ரயில் ரோஹ்தக்கில் இருந்து ஜிண்ட் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரயிலின் 8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சரக்கு ரயிலின் ஒட்டுநர் ரோஹ்தக்கில் உள்ள ரயில்வே கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து 8 பெட்டிகளை அகற்றும் பணி நடைபெற்றது. 

மேலும் இச்சம்பம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT