ஹரியாணாவில் உள்ள ரோஹ்தக் மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதால், அப்பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.
ரோஹ்தக்-ஜிந்த் ரயில் பாதையில் சமர்கோபால்பூர் கிராமத்திற்கு அருகில் சரக்கு ரயில் ரோஹ்தக்கில் இருந்து ஜிண்ட் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரயிலின் 8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சரக்கு ரயிலின் ஒட்டுநர் ரோஹ்தக்கில் உள்ள ரயில்வே கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து 8 பெட்டிகளை அகற்றும் பணி நடைபெற்றது.
இதையும் படிக்க: தெறிக்க விட்ட விராட் கோலி: இலங்கைக்கு 391 ரன்கள் இலக்கு!
மேலும் இச்சம்பம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே காவல் துறையினர் தெரிவித்தனர்.