முகப்பு
இந்தியா

ஏர் இந்தியாவில் அதிக பெண் விமானிகள்!

ஏர் இந்தியா நிறுவனத்தின் 1,825 விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண் விமானிகள் என ஏர் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.

Updated On : 8 மார்ச் 2023, 10:09 pm IST
airindia075646
பகிர்:

புதுதில்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் 1,825 விமானிகளில் 15 சதவிகிதம் பேர் பெண் விமானிகள் என ஏர் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியாவுடன் இணைந்து 90க்கும் மேற்பட்ட பெண் விமானிகள், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களை  மார்ச் 1 முதல் இயக்கி வருகின்றனர்.

குறிப்பாக அனைத்து பெண்கள் கொண்ட காக்பிட் மற்றும் கேபின் ஊழியர்களால் இயக்கப்படும் 90க்கும் அதிகமான விமானங்களில் ஏர் இந்தியா, உள்நாட்டு மற்றும் சர்வதேச வழிதடங்களில் 40 விமானங்களை இயக்கி வருகிறது.

Advertisement

Advertisement

அதே நேரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வளைகுடா பாதையில் 10 சர்வதேச விமானங்களையும், ஏர் ஏசியா இந்தியாவுக்குள் 40க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது.

ஏர் இந்தியாவின் பணியாளர்களில் 40 சதவீதத்திற்கும் மேலாக பெண்கள் உள்ள நிலையில் அதன் 1,825 விமானிகளில் 275 பேர் பெண்களாக உள்ளனர். அதே வேளையில் அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகளைக் கொண்ட விமான நிறுவனமாகவும் ஏர் இந்தியா திகழ்கிறது.

ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான காம்ப்பெல் வில்சன் கூறுகையில், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வணிக பெண் விமானிகளைக் கொண்ட நாடு இந்தியா என்றார்.

இன்று ஏர் இந்தியாவில் எங்களுடன் இருக்கும் பெண் ஊழியர்களைப் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். பெண்கள் எந்தத் துறையிலும் சிறந்து விளங்க முடியும் என்ற சக்திவாய்ந்த செய்தியை இதன் மூலம் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக ஒவ்வொருவருக்கும் நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments