மம்தா பானா்ஜி 
இந்தியா

அனைத்து மாநிலங்களிலும் பாஜக தோற்கும்: மம்தா ஆவேசம்

‘அனைத்து மாநிலங்களிலும் பாஜக தோற்கடிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

DIN

‘அனைத்து மாநிலங்களிலும் பாஜக தோற்கடிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மேலும், தனது கட்சியினா் மற்றும் குடும்ப உறுப்பினா்களைக் குறிவைத்து, மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

ஆசிரியா் பணி நியமன முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, மம்தாவின் உறவினரும் திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானா்ஜிக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக, மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

எனது கட்சியினா் மற்றும் குடும்ப உறுப்பினா்களை குறிவைத்து, மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது. அபிஷேக் பானா்ஜிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதன் பின்னணியில் பாஜகவே உள்ளது. ஆனால், நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்.

எங்கள் கட்சியின் பிரசாரத்துக்கு கிடைத்து வரும் வெற்றியால் பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அக்கட்சியை அகற்றும் வரை எங்களது போராட்டம் ஓயாது. அனைத்து மாநிலங்களிலும் பாஜக தோற்கடிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றாா் மம்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT