இந்தியா

சங்கரய்யா வலுவான பேச்சாளர்: மார்க்சிஸ்ட் கட்சி இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் என்.சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

DIN

புது தில்லி: மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சங்கரய்யா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போதே விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தவர். அதன் காரணமாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் கல்லூரி இறுதி தேர்வெழுத இயலவில்லை. எட்டு வருடங்கள் இந்தியா விடுதலையடையும் வரை சிறையில் கழித்தவர்.

மார்க்சிஸ்ட் கட்சி அமைப்பதற்காக, ஒருங்கிணைந்த பொதுவுடைமை இயக்கத்தின் தேசிய குழுவில் இருந்து வெளியேறிய 32 பொதுக்குழு உறுப்பினர்களுள் சங்கரய்யாவும் ஒருவர்.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர பெரும்பங்காற்றியவர், சங்கரய்யா. விவசாயி இயக்கத்தை வளர்த்தெடுப்பதிலும் முக்கிய பங்காற்றியவர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொது செயலாளராகவும் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

சங்கரய்யா, வலுவான பேச்சாளர். பொதுவுடைமை அரசியலையும் கொள்கைகளையும் மக்களுக்கு புரியும்வகையில் விளக்கக் கூடியவர். கட்சியின் மீது அதீத பற்று கொண்டிருந்த மனிதர், பொது வாழ்வில் நேர்மையாகவும் எளிமையாகவும் இருப்பதில் உயர்ந்த அளவுகோலை உருவாக்கியவர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பிலும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT