கோப்புப் படம் 
இந்தியா

கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ்

மசோதா விவகாரத்தில் காலம்தாழ்த்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

DIN

மசோதா விவகாரத்தில் காலம்தாழ்த்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், மாநில ஆளுநா் காலம்தாழ்த்தி வருவதாக கேரள மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. 

மனுவில், கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்ட 8 மசோதாக்களுக்கு மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளிக்காமல் உள்ளாா். இவற்றில் சில மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. 

இது மாநில மக்களின் உரிமையை மீறுவதாக உள்ளது என கேரள அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்விவகாரத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க கேரள ஆளுநரின் கூடுதல் செயலர், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT