இந்தியா

ஆந்திர ரயில் விபத்து: ரூ.2 லட்சம் நிவாரணம்!

ஆந்திரப் பிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிதியுதவியும் அறிவித்துள்ளார். 

DIN

ஆந்திரப் பிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிதியுதவியும் அறிவித்துள்ளார். 

விஜயநகரம் மாவட்டத்தின் கன்கடபள்ளி பகுதியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை விசாகப்பட்டினம்-ராயகடா இடையிலான பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினம்-பலாசா பயணிகள் ரயில் பின்னால் இருந்து மோதியதில் சில பெட்டிகள் தடம்புரண்டன.

இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இந்த நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, பலியானோர் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

நெல் மணிகளை தேக்கமின்றி கொள்முதல் செய்ய கோரி சாலை மறியல்

இந்தியாவில் இருந்து 8 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 3 லட்சம் பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ்

அக்.31-இல் குஜராத்தில் மகாபஞ்சாயத் நிகழ்வில் கேஜரிவால் பங்கேற்பு: கோபால் ராய் பேட்டி

SCROLL FOR NEXT