இந்தியா

டெங்கு காய்ச்சலுக்கு இளம் மருத்துவர் பலி!

கொல்கத்தா மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்த 28 வயது மருத்துவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

DIN

கொல்கத்தா மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்த 28 வயது மருத்துவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதையடுத்து, நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் அதிகரித்து வருகின்றன. 

அதன்படி, மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டால் இளம் கண் மருத்துவர் டெபோடி சட்டோபாத்யாய் நேற்று உயிரிழந்தார். இவருடன் சேர்த்து மாநிலத்தில் இந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் கண் மருத்துவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவர், மேலும் பல உறுப்புகள் செயலிழந்ததே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

உயிரிழந்த கண் மருத்துவர் தெற்கு கொல்கத்தாவின் கார்பா பகுதியில் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

சூப்பர் அறிவிப்பு... செபியில் 110 உதவி மேலளார் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: +2 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

சீனாவிலிருந்து வழிநடத்தப்பட்டதாக கூறப்படும் வா்த்தக மோசடி மூவா் கைது!

எல்விஎம்-3 ராக்கெட் நவ.2-இல் விண்ணில் பாய்கிறது!

SCROLL FOR NEXT