சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி உடனிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முதலே சுவாசத் தொற்றினால் சோனியா காந்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
தற்போது உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்று வரும் நிலையில், சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு பிரியங்கா காந்தி மீண்டும் நடைப்பயணத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | 2022 - காங்கிரஸுக்கு கைகொடுக்குமா, ராகுலின் நடைப்பயணம்?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.