முகப்பு
இந்தியா

தமிழக ஆதீனங்களின் சிறப்பு வழிபாட்டில் மோடி!

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவையொட்டி தமிழக ஆதீனங்கள் நடத்தும் சிறப்பு வழிபாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:59 PM
பகிர்:

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவையொட்டி தமிழக ஆதீனங்கள் நடத்தும் சிறப்பு வழிபாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். அவருடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் கலந்துகொண்டுள்ளார். 

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா சா்வ மத பிராா்த்தனைகளுடன் தில்லியில் நடைபெற்று வருகிறது. புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்பு பூஜைகள் தொடங்கியுள்ளன. 

இதற்காக புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி காலை 7.15 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வருகை புரிந்தார். 

காலை 7.30 மணியளவில் ஹோமம் பூஜைகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுள்ளார். 

வேத மந்திரங்கள் முழங்க தமிழக ஆதீனங்கள், ஓதுவார்கள் நடத்தும் சிறப்பு வழிபாட்டில் பிரதமர் கலந்துகொண்டு, வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →