ஒரே நாளில் 3 குழந்தைத் திருமணங்கள்!
நாந்தேட் மாவட்டத்தில் மூன்று குழந்தைத் திருமணங்கள் நிறுத்தம்
மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் ஒரே நாளில் 3 குழந்தைத் திருமணங்களை தடுத்ததாக மாவட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
குழந்தைத் திருமணங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து முகேத் மற்றும் கந்தார் தாலுகாக்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
Advertisement
Advertisement
அந்த பகுதிக்கு விரைந்த மாவட்ட அதிகாரிகள் மற்றும் மகளிர் வளர்ச்சித் துறையினர் திருமணத்தை நிறுத்தி குழந்தைகளை மீட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.