மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் ஒரே நாளில் 3 குழந்தைத் திருமணங்களை தடுத்ததாக மாவட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
குழந்தைத் திருமணங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து முகேத் மற்றும் கந்தார் தாலுகாக்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த பகுதிக்கு விரைந்த மாவட்ட அதிகாரிகள் மற்றும் மகளிர் வளர்ச்சித் துறையினர் திருமணத்தை நிறுத்தி குழந்தைகளை மீட்டனர்.