FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வீட்டுக்கு வந்த பார்சல்: குப்பை பை போல வந்த திருடன்.. வைரலான விடியோ

வீட்டுக்கு வந்த பார்சலைத் திருட குப்பை பை போல வந்த திருடன் பற்றிய விடியோ வைரலாகியிருக்கிறது.

Updated On : 9 ஏப்ரல் 2024, 4:11 pm IST
பகிர்:

பல்வேறு திருட்டு விடியோக்களை நாம் பார்த்து அதிர்ச்சியடைந்திருப்போம், சில ஆச்சரியத்தை அளித்திருக்கும். இது சற்று நகைச்சுவையை வரவழைக்கும் எனலாம்.

கலிஃபோர்னியாவில், ஒரு வீட்டு வாசலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான விடியோதான் தற்போது சமூக ஊடகங்களில் பலரின் கருத்துகளை பெற்று வருகிறது.

இது குறித்து வாஷிங்டன் போஸ்ட் சிசிடிவி விடியோவுடன் செய்தியும் பகிர்ந்துள்ளது. ஒரு வீட்டு வாயிலில், கருப்பு நிற குப்பை பை ஒன்று கனமாகக் கிடக்கிறது. என்ன அதிசயம், அதற்கு இரண்டு கால்களும் இருக்கின்றன.

Advertisement

Advertisement

பிறகு, அந்த குப்பை பை மெல்ல நடந்து வந்து, நீங்கள் நினைப்பது போல குப்பைத்தொட்டியில் எல்லாம் விழவில்லை. வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பார்சலை லாவகமாக எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டு, அதே இரண்டு கால்களுடன் நடந்து சென்றுவிடுகிறது.

முனோஸ் என்பவரது வீட்டு வாயிலில் இருந்த சிசிடிவியில்தான் இந்த விடியோ பதிவாகியிருக்கிறது. இது குறித்து அவர் கூறுகையில், நான் ஆர்டர் போட்டிருந்தது வீட்டுக்கு வந்துவிட்டதாக எனக்கு மெசேஜ் வந்தது. ஆனால், மாலையில் வீட்டுக்குப் போகும்போது அந்த பார்சல் வீட்டில் இல்லை. உடனே சிசிடிவி விடியோவை ஆராய்ந்தபோது முதலில் எனக்குக் கோபம்தான் வந்தது. ஆனால், பிறகு பல முறை பார்த்து நகைச்சுவையாக இருந்தது என்கிறார்கள்.

இது பற்றி காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறிவிட்டார். இந்த விடியோவுக்கு பலரும் பல விதமான கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

எனினும், அந்த பார்சலில் என்னதான் இருந்தது என்று கேட்டால், அது வேறுஒன்றும் இல்லையாம் சுமார் 10 டாலர் மதிப்பிலான போன் சார்ஜர்தானாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments