முகப்பு
இந்தியா

சுங்கத்துறை அதிகாரிகள் பேரில் மோசடி: ரூ. 2.24 கோடியை இழந்த ஐடி ஊழியர்!

ஐடி ஊழியர் ரூ.2.24 கோடி இழப்பு: சுங்கத்துறை மோசடியின் புதிய வடிவம்

Updated On : 11 ஏப்ரல் 2024, 8:02 pm IST
பகிர்:

52 வயதான பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவரிடம் ரூ.2.24 கோடி ரூபாயை இணையவழி பண மோசடி கும்பல் பறித்துள்ளதாக வியாழக்கிழமை காவலர்கள் தெரிவித்தனர்.

இந்த பண மோசடி கும்பல் தில்லியில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் போலவும் போதை தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் போலவும் பேசி ஏமாற்றியுள்ளனர்.

இதே போலான மோசடியில் 29 வயதான பெண் வழக்குரைஞர் சில நாள்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டு ரூ.14.57 லட்சத்தை இழந்துள்ளார்.

Advertisement

Advertisement

பாதிக்கப்பட்ட மென்பொறியாளரான குமாரசாமி சிவகுமாரை பணமோசடி கும்பல் மார்ச் 18 முதல் 27-ம் தேதிக்குள் போன் மூலமாக அழைத்துள்ளனர்.

தில்லி சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக குறிப்பிட்ட மோசடிக்காரர்கள், அவர் பெயரில் தில்லியில் இருந்து மலேசியா செல்லும் விமான பார்சலில் 16 கடவுச்சீட்டுகள், 58 வங்கி அட்டைகள் மற்றும் 140 கிராம் போதை மருந்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த அழைப்பு போதை தடுப்பு பிரிவில் இருந்து பேசுவதாக வந்துள்ளது. அவர்கள் ஸ்கைப் விடியோ அழைப்புக்கு வருமாறு வலியுறுத்தி இதிலிருந்து வெளியே வர வேண்டுமானால் பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

ஆர்டிஜிஎஸ் மற்றும் ஐஎம்பிஎஸ் மூலம் வெவ்வேறு தவணைகளில் ஐடி ஊழியர் ரூ.2.24 கோடியை மோசடி கும்பலுக்கு அனுப்பியுள்ளார்.

ஏப்ரல் 5-ம் தேதி வரை தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பது அவருக்கு தெரியவில்லை. பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வடகிழக்கு சைபர் காவல் நிலையத்தில் மட்டும் இதே போலான 25 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments