Center-Center-Bangalore
Center-Center-Bangalore
இந்தியா

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

DIN

உத்தரப் பிரதேசத்தில் விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் எழுதிய மாணவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண்களை அள்ளிவீசிய பேராசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உ.பி.யின், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வாஞ்சல் பல்கலைக்கழகம் இயக்கி வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயின்றுவரும் பல்கலைக்கழகத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மருந்தியல் துறை டிப்ளமோ படிப்பிற்கான தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது. தேர்வெழுதிய மாணவர்களில் 4 பேர் விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என்றும் சில கிரிக்கெட் வீரர்களின் பெயர்களையும் விடைத்தாள் முழுவதும் எழுதிவைத்தனர்.

இந்த நிலையில், விடைத்தாள்களைத் திருத்திய பேராசிரியர்கள் இருவர், ஜெய்ஸ்ரீராம் என்று எழுதிய நான்கு மாணவர்களுக்கும் 50 சதவீத மதிப்பெண்களை வாரி வழங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக, பல்கலையின் முன்னாள் மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தரான ஆனந்தி பென்னிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஐ மூலம் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யப்பட்டது. அதில், தேர்வு வினாத்தாள் முழுவதும் ஜெய் ஸ்ரீராம் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதியிருப்பதும், அவர்கள் நான்கு பேருக்கும் 50 சதவீத மதிப்பெண்கள் அளித்திருப்பதும் வெட்ட வெளிச்சமானது.

இதையடுத்து, நான்கு மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது. தேர்வெழுதிய 4 மாணவர்களும் பூஜ்யம் மதிப்பெண்கள் எடுத்ததையடுத்து, விடைத்தாளைத் திருத்திய பேராசிரியர்கள் இருவரை பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலித் மாணவிக்கு நேர்ந்த துயரம்: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை

‘தேர்தல் ஆணையத்தின் பெரும் தோல்வி’: உயர்நீதிமன்றம்

ஐந்தாம் கட்ட தேர்தலில் வாக்களித்த பெரும்புள்ளிகள்!

நாங்கள் காரணம் அல்ல: ஈரான் ஹெலிகாப்டர் விபத்து குறித்து இஸ்ரேல்

கட்டாய முஸ்லீம் தோழி: எதிர்நீச்சல் நடிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புதுவசந்தம் நடிகை!

SCROLL FOR NEXT