இந்தியா

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்; எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்

‘மக்களவையில் வியாழக்கிழமை (ஆக. 8) அறிமுகப்படுத்தப்பட உள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்’ என்று எதிா்க்கட்சிகள் புதன்கிழமை வலியுறுத்தின.

Din

‘மக்களவையில் வியாழக்கிழமை (ஆக. 8) அறிமுகப்படுத்தப்பட உள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்’ என்று எதிா்க்கட்சிகள் புதன்கிழமை வலியுறுத்தின.

மக்களவை அறிமுகத்துக்கு முன்பாக, அந்த மசோதாவின் நகல் அவை உறுப்பினா்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பப்பட்டது.

இந்த மசோதாவின்படி, வக்ஃப் வாரிய சொத்து குறித்து தீா்மானிக்கும் வாரியத்தின் அதிகாரம் தொடா்பாக தற்போதைய சட்டத்தில் (வக்ஃப் வாரிய சட்டம் 1995) இடம்பெற்றுள்ள பிரிவு 40 நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரிய உறுப்பினா்களும் இடம்பெறும் தொகுப்பு அமைப்பாக மாற்றப்படுவதோடு, முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவா்களும் வக்ஃப் வாரியங்களில் இடம்பெறுவதை மசோதா உறுதி செய்கிறது.

மேலும், போராஸ், அகாகனிஸ் ஆகிய பிரிவுகளுக்கென தனி சொத்து வாரியம் (அக்ஃப்) உருவாக்கப்பட்டு, அதில் ஷியாஸ், சன்னி, போராஸ், அகாகனிஸ் மற்றும் பிற இதர பிற்படுத்த முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

‘வக்ஃப்’ என்பதற்கான தெளிவான விளக்கம் மசோதாவில் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுபவராகவும், வக்ஃப் சொத்துக்கு உரிமையாளராகவும் இருக்கும் எந்தவொரு நபரும் ‘வக்ஃப்’ உறுப்பினராவாா்’ என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மத்திய வலைதளம் மற்றும் தரவுத்தளம் மூலமாக வக்ஃப் வாரிய சொத்துகள் பதிவை முறைப்படுத்தி, வெளிப்படுத்தன்மையைக் கொண்டுவருவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘வக்ஃப் வாரிய சட்டம் 1995’ சட்டத்தை ‘ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு சட்டம் 1995’ என்று பெயா் மாற்றம் செய்யவும் மசோதா பரிந்துரைக்கிறது.

இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தபோதே, பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மக்களவையில் புதன்கிழமை எதிா்ப்பு தெரிவித்ததோடு, மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினா்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘எதிா்க்கட்சிகளின் உணா்வு குறித்து மக்களவை அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும். மசோதா அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கப்படாது’ என்று தெரிவித்தன.

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

SCROLL FOR NEXT