முகப்பு
இந்தியா

பிகாரில் சித்தேஷ்வர்நாத் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

பிகாரில் சித்தேஷ்வர்நாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் பலியாகினர்.

Updated On : 12 ஆகஸ்ட் 2024, 9:16 am IST
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள்.
பகிர்:

பிகாரில் சித்தேஷ்வர்நாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் பலியாகினர்.

பிகார் மாநிலம், ஜெகனாபாத்தில் உள்ள பாபா சித்தேஷ்வர்நாத் கோயிலில் ஆண்டுதோறும் புனித ஷ்ராவண் மாதத்தில் நடைபெறும் திருவிழாவுக்காக பக்தர்கள் ஏராளமானோர் நள்ளிரவு முதலே குவிந்திருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் நெரிசலில் சிக்கி, 3 பெண்கள் உட்பட 7 பேர் பலியாகினர். 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். கோயிலில் இருந்த பக்தர் ஒருவர் கூறுகையில், பூ விற்பனையாளருடன் ஏற்பட்ட சண்டையில் தன்னார்வலர்கள் தடியடி நடத்தினர்.

Advertisement

Advertisement

இது கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது, அப்போது நிர்வாகத்தினர் யாரும் இல்லை. காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் அலட்சியத்தால் இது நடந்தது என்றார். இதனிடையே கூட்டத்தைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்கள் லத்திகளைப் பயன்படுத்தியதை ஜெகனாபாத் துணைப் பிரிவு அதிகாரி விகாஷ் குமார் மறுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments