முகப்பு
இந்தியா

அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகைக்கு எதிராக கேஜரிவால் மனு: ஜன.30ல் விசாரணை!

கேஜரிவால் தாக்கல் செய்த மனு ஜனவரி 30ல் விசாரணை

Updated On : 20 டிசம்பர் 2024, 4:56 pm IST
அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

தில்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கை விசாரணை உத்தரவை எதிர்த்து முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு ஜனவரி 30ல் விசாரணை நடத்தப்படும் என்று தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 19, 2025-க்கு பட்டியலிடப்பட்ட நிலையில், கேஜரிவாலின் வழக்குரைஞர்கள் வேண்டுகோளுக்கிணங்க உயர் நீதிமன்றம் ஜனவரி 30 அன்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

அடுத்தாண்டு தில்லியில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் நிபந்தனை குறித்த வழக்கும் ஜனவரி 30-க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments