முகப்பு
இந்தியா

நீட் முறைகேடு: காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!

நீட் மற்றும் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிக்க நோட்டீஸ்.

Updated On : 1 ஜூலை 2024, 10:32 am IST
மக்களவை - -
பகிர்:

நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகள் முறைகேடு குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

காங்கிரஸ் எம்பிக்கள் கேசி வேணுகோபால் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் மக்களவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகளிக் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து இன்று விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

மாணிக்கம் தாகூர் நோட்டீஸ்

அதேபோல், நாடு முழுவதும் இன்றுமுதல் அமலாகியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

கடந்த வாரம் முழுவதும் குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதத்தை ஒத்திவைத்துவிட்டு நீட் முறைகேடு குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இன்றும் விவாதிக்க அவைத் தலைவர் அனுமதிக்காத பட்சத்தில் அமளி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments