உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் இருந்து தில்லிக்கு சனிக்கிழமை சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் அம்ரோஹா அருகே திடீரென தடம்புரண்டது.
இந்த விபத்தில் ரயிலின் 7 பெட்டிகள் கவிழ்ந்தன. இருப்பினும், இந்த சம்பவத்தால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள் உடனடியாக விரைந்தனர். இந்த சம்பவத்தால் தில்லி-லக்னௌ ரயில் பாதை பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உத்தர பிரதேசத்தின் கோண்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே சண்டீகா் - திப்ரூகா் (அஸ்ஸாம்) விரைவு ரயில் வியாழக்கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு சரிந்தன. இந்த விபத்தில் நான்கு பயணிகள் பலியாகினர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.