முகப்பு
இந்தியா

சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை- மும்பை விமானத்தில் வெடிகுண்டு? பயணிகள் அவசரமாக வெளியேற்றம்!

Updated On : 1 ஜூன் 2024, 12:26 pm IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னையிலிருந்து மும்பை புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்.

சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று(ஜூன் 1) காலை இண்டிகோ நிறுவனத்தின் ’6இ - 5134’ என்ற விமானம் மும்பை செல்ல தயாராக இருந்தது.

இந்த நிலையில், 172 பயணிகளுடன் மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி அவசர தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தில் காலை 8.45 மனியளவில் அவசர அவசரமாக இண்டிகோ விமானம் தரையிறக்கப்பட்டது. உடனடியாக அதிலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதன்பின், விமானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த வெள்ளியன்று தில்லியிலிருந்து ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீநகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதுடன் அதிலிருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

அதேபோல, கடந்த செவ்வாயன்று தில்லியிலிருந்து வாராணசி செல்ல தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிலிருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் விமானப் போக்குவரத்து குறித்த அச்சம் பயணிகளிடையே எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments