முகப்பு
இந்தியா

தில்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

லக்னௌவிலிருந்து தில்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பபடுத்தியது.

Updated On : 12 ஜூன் 2026, 8:15 pm IST
வெடிகுண்டு மிரட்டல். - ANI
பகிர்:

லக்னௌவிலிருந்து தில்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பபடுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவிலிருந்து 180 பயணிகளுடன் தலைநகர் தில்லிக்கு வெள்ளிக்கிழமை காலை 10.45 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்படத் தயாராகவிருந்தது.

அப்போது விமானத்தில் வெடிகுண்டு இருக்கக்கூடும் என்ற தகவல் விமான ஊழியர்களுக்குக் கிடைத்ததாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, விமானம் ஓடுதளப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்புப் படையினர் விமானம் மற்றும் பிற பகுதிகளில் சோதனையிடத் தொடங்கினர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

விமானத்தின் கழிப்பறையில் வெடிகுண்டு என்று எழுதப்பட்ட டிஷ்யூ பேப்பர் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும், அதனால் பீதி ஏற்பட்டதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.

summary

A Lucknow-Delhi flight was delayed on Friday after a hoax bomb threat was received shortly before it was to take off from the airport here, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.