பொக்ரானில் முப்படைகளின் ஒத்திகைப் பயிற்சி: பிரதமர் மோடி பார்வையிடுகிறார்
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று(மார்ச் 12) நடைபெறும் முப்படைகளின் ஒத்திகைப் பயிற்சியை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களும் இந்த ராணுவப் பயிற்சியின்போது காட்சிப்படுத்தப்படவுள்ளன. கடற்படை ஏவுகணைகள், விமானப்படை தேஜஸ் இலகுரக போர்விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்பட பல்வேறு ராணுவ உபகரணங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.