இந்தியா

கேரளத்தில் 75 நாள்களில் 6,744 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு, 9 பேர் பலி

Sasikumar

கேரளத்தில் 75 நாள்களில் அம்மை நோய்க்கு 9 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரளத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அங்கு அம்மை நோய் பாதிப்புகள் கடந்த சில நாள்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 75 நாள்களில் மட்டும் இந்த நோய்க்கு குழந்தைகள் உட்பட 6,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 9 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் மாநிலத்தில் 26,363 பேருக்கு அம்மை நோய் கண்டறியப்பட்டதாகவும் அதில், நான்கு பேர் பலியானதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகரிப்பதால், நோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

தொற்று பாதிப்புக்குள்ளான ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு இந்நோய் பரவுகிறது. மேலும் இந்த வைரஸ் காற்றின் மூலமாகவும் பரவுகிறது என்று கேரளத்தின் இந்திய மருத்துவ சங்கத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு: சென்னையில் 99.30% தேர்ச்சி

ஸ்டார் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு!

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: சோனியா காந்தி

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 60 பேர்!

SCROLL FOR NEXT