மும்பை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்) 
இந்தியா

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

ஒளரங்கபாத், உஸ்மானாபாத் நகரங்களின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்தவர்களின் மனுக்கள் தள்ளுபடி.

DIN

ஒளரங்கபாத் மற்றும் உஸ்மானாபாத் நகரங்களுக்கு பெயர் மாற்றும் மகாராஷ்டிர அரசின் முடிவுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி டி கே உபாத்யாயா மற்றும் நீதிபதி ஆரிஃப் ஆகியோர் அமர்வு, மாநில அரசின் அறிவிப்பில் நாங்கள் தலையிட விரும்பவில்லை, இரு நகரங்களின் பெயர் மாற்றம் செய்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் இல்லை என்பதால் அரசுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம் எனத் தெரிவித்தனர்.

ஒளரங்கபாத்தை சத்ரபதி சம்பாஜி நகர் என்றும், உஸ்மானாபாத்தை தாராஷிவ் என்றும் பெயர் மாற்றம் செய்ய மகாராஷ்டிர அரசு முடிவெடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.

தொடர்ந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்து 2023-ல் அனுமதி அளித்தது.

இதையடுத்து இரு நகரங்களின் பெயரை மாற்றி மகாராஷ்டிர அரசும் அரசாணை வெளியிட்டது.

இதற்கிடையே பெயர் மாற்றும் அரசின் முடிவை எதிர்த்து ஒளரங்கபாத் மற்றும் உஸ்மானாபாத் மக்கள் பலர் பொதுநல மனுக்களை மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மகராஷ்டிர அரசு, இந்த விவகரத்தில் வரலாற்று சிறப்பிற்காக மட்டுமே பெயர் மாற்றப்படுவதாகவும், வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT