FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிபிஎஸ்இ: இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி!

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Updated On : 13 மே 2024, 12:23 pm IST
பகிர்:

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளில், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2 ம் தேதி முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை மொத்தம் 16,21,224 பேர் தேர்வெழுதினர். அதில் 14,26,420 தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 87.98 ஆகப் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

வழக்கம் போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே கூடுதலாக 6.40 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு 0.65 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை www.cbse.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments