FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள்: இம்முறை..

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டேயிருக்கும் நிலையில் இம்முறை திகார் சிறைக்கும் வந்துள்ளது.

Updated On : 15 மே 2024, 11:36 am IST
வெடிகுண்டு மிரட்டல்
பகிர்:

மின்னஞ்சல் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்து குவியும் வெடிகுண்டு மிரட்டல்களில் இம்முறை திகார் சிறைக்கும், தில்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கும் வந்திருப்பதால் சோதனை செய்யும் நிபுணர்களுக்கே அது சோதனையாக மாறிவிட்டது.

திகார் சிறையில் வெடிகுண்டு நிபுணர் குழுவின் ஒரு பகுதியினரும் மருத்துவமனைக்கு ஒரு குழுவினரும் என விரைந்து சென்று முழுக்க சோதனை செய்து அதுபோன்ற எந்த வெடிகுண்டும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

இதுவரை பள்ளிகள், விமான நிலையம் என பொதுவிடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. அங்கெல்லாம் சோதனை என்றால், உள்ளே இருப்பவர்களே வெளியே செல்லுமாறு அறிவுறுத்திவிட்டு சோதனையை செய்யலாம். ஆனால் திகார் சிறையிலும், மருத்துவமனையிலும் என்ன செய்வது, உள்ளே இருப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாமல்தான் சோதனையை நிறைவு செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

அதாவது, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வந்த மின்னஞ்சலில், குறிப்பிட்ட இந்தந்த இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது அடுத்த சில மணி நேரங்களில் வெடிக்கப்போகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது வந்திருக்கும் மின்னஞ்சல், சைப்ரஸ் நாட்டிலிருந்து செயல்படும் மின்னஞ்சல் சேவை நிறுவனத்தின் முகவரியிலிருந்து வந்துள்ளது. அதாவது, beeble.com என்ற முகவரியிலிருந்து வந்துள்ளது. இதே மின்னஞ்சலிலிருந்துதான் கடந்த ஞாயிறன்று மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. எனவே, இதன் பயனர் யார் என்பது குறித்து அந்த மின்னஞ்சல் நிறுவனத்துக்கு காவல்துறையினர் தகவல் கேட்டுள்ளனர்.

நடத்தப்பட்டிருக்கும் விசாரணையில், இந்த வெடிகுண்டு மிரட்டல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர்தான் அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments