முகப்பு
இந்தியா

கேரளத்தில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை..!

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்குகிறது.

Updated On : 29 மே, 2024 at 4:37 PM
பகிர்:

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, ஜூன் 8-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், நிகழாண்டு மே.30-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.

கடந்த ஒரு வாரமாக கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால் சாலைகளையும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →