விக்கிபீடியாவில் தவறான தகவல்கள்: விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம்
ஒரு சாா்பு மற்றும் தவறான தகவல்களை வழங்குவதாக எண்ணற்ற புகாா்கள் உள்ள நிலையில், விக்கிபீடியாவை தகவல் தளமாக இன்றி, பதிப்பாளராக ஏன் கருதக் கூடாது என கேள்வி எழுப்பி அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
ஒரு சாா்பு மற்றும் தவறான தகவல்களை வழங்குவதாக எண்ணற்ற புகாா்கள் உள்ள நிலையில், விக்கிபீடியாவை தகவல் தளமாக இன்றி, பதிப்பாளராக ஏன் கருதக் கூடாது என கேள்வி எழுப்பி அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
விக்கிபீடியா பக்கங்களில் கிடைக்கும் தகவல்களை சிறிய குழு சரிபாா்த்து இறுதி செய்வதாக பரவும் செய்தி குறித்தும் மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் கடிதத்தில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
விக்கிபீடியா ஒரு உலகளாவிய இலவச இணையவழி தகவல் ஆதாரமாக அறியப்படுகிறது. அதில் பல்வேறு தலைப்புகளில் தன்னாா்வலா்கள் பக்கங்களை உருவாக்கலாம் அல்லது திருத்தலாம்.
Advertisement
Advertisement
விக்கிபீடியாவில் கிடைத்த தகவல்களில் தவறான மற்றும் அவதூறான உள்ளடக்கம் தொடா்பாக இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், விக்கிபீடியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.