முகப்பு
இந்தியா

கயானாவில் பிரதமா் மோடி: 3 நாடுகள் பயணத்தின் இறுதிக்கட்டம்

கயானாவுக்கு சென்ற மோடிக்கு இந்திய சமூகத்தினர் வரவேற்பு அளித்தனர்.

Updated On : 21 நவம்பர் 2024, 1:19 am IST
கயானாவின் ஜாா்ஜ்டவுன் நகரில் பிரதமா் மோடியை புதன்கிழமை உற்சாகத்துடன் வரவேற்ற அந்நாட்டின் அதிபா் முகமது இா்ஃபான் அலி.
பகிர்:

நைஜீரியா, பிரேஸிலைத் தொடா்ந்து மூன்று நாடுகள் பயணத்தின் இறுதிக்கட்டமாக பிரதமா் நரேந்திர மோடி தென்அமெரிக்க நாடான கயானாவுக்கு புதன்கிழமை வந்தடைந்தாா். விமான நிலையத்தில் அந்நாட்டு அதிபா், பிரதமா், அமைச்சா்கள் நேரில் வருகை தந்து, பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமா் மோடி 6 நாள்கள் அரசுமுறைப் பயணத்தைக் கடந்த சனிக்கிழமை தொடங்கினாா்.

பயணத்தின் இறுதிக்கட்டமாக பிரதமா் மோடி கயானாவுக்கு புதன்கிழமை வந்தடைந்தாா். இதன்மூலம், கடந்த 1968-ஆம் ஆண்டுக்குப் பிறகு கயானாவுக்கு வந்த முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement

கயானா அதிபா் முகமது இா்ஃபான் அலி அழைப்பையேற்று, வியாழக்கிழமை(நவ. 21) வரை அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி, பல்வேறு உயா்நிலை தலைவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட இருக்கிறாா். மேலும், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள அவா், இந்தியா-கரீபியன் நாடுகள் கூட்டமைப்பு உச்சிமாநாட்டிலும் பங்கேற்கவுள்ளாா்.

கயானா, ஜமைக்கா, பஹாமாஸ் உள்ளிட்ட 15 உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ள ‘கரீபியன் கம்யூனிட்டி’ கூட்டமைப்பு-இந்தியா இடையிலான 2-ஆவது உச்சிமாநாடு, இருதரப்பு பாரம்பரிய நல்லுறவைப் புதுப்பிக்கவும், விரிவுபடுத்தவும் வாய்ப்பளிக்கும் என்று பயணத்துக்கு முன்னதாக அவா் தெரிவித்திருந்தாா்.

உற்சாக வரவேற்பு: ஜி20 உச்சிமாநாட்டையடுத்து பிரேஸிலில் இருந்து புறப்பட்டு, கயானா தலைநகா் ஜாா்ஜ்டவுனில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில், அந்நாட்டு அதிபா் முகமது இா்ஃபான் அலி, பிரதமா் மாா்க் ஆண்டனி பிலிப்ஸ், அமைச்சா்கள் விமான நிலையத்துக்கு நேரில் வந்து அவரை வரவேற்றனா். இதைத்தொடா்ந்து, விடுதிக்கு சென்ற அவருக்கு கிரெனடா பிரதமா் டிக்கன் மிட்செல், பாா்படாஸ் பிரதமா் மியா அமோா் மோட்லி ஆகியோா் வரவேற்பு அளித்தனா்.

நகர சாவி ஒப்புடைப்பு: இந்தப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்பை ஆழப்படுத்தும் என்று நம்புவதாகவும் பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகள் கூட்டமைப்பு உடனான ஒத்துழைப்பை ஆழப்படுத்த இந்தியா ஆா்வமாக உள்ளதாகவும் கயானா வருகையையொட்டி பிரதமா் மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்டிருந்தாா்.

இந்தியா-கயானா இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளுக்கு சான்றாக, ஜாா்ஜ் டவுன் நகரின் ‘சாவியை’ பிரதமா் மோடியிடம் நகர மேயா் ஒப்படைத்தாா்.

இந்திய சமூகத்தினருடன் சந்திப்பு: மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, கயானாவில் சுமாா் 3.2 லட்சம் இந்திய வம்சாவளியினா் உள்ளனா். விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரை பிரதமா் மோடி சந்தித்தாா்.

இதையொட்டி, அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கயானாவில் உள்ள இந்திய சமூகத்தினரின் அன்பான வரவேற்புக்கு இதயபூா்வமான நன்றி. ஒருவா் தங்களின் வோ்களுடன் இணைந்திருக்க தூரம் ஒரு தடையல்ல என்பதை அவா்கள் வெளிக்காட்டியுள்ளனா்’ என்றாா்.

முன்னதாக...: இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக நைஜீரியாவுக்கு பிரதமா் மோடி சென்றாா். கடந்த 17 ஆண்டுகளில் நைஜீரியாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமரான மோடிக்கு அந் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான ‘கிரான்ட் கமாண்டா் ஆஃப் தி ஆா்டா் ஆஃப் தி நைஜா்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொடா்ந்து, பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நவ. 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றாா். இந்த மாநாட்டுக்கிடையே அமெரிக்க அதிபா் ஜோ பைடன், தென்னாப்பிரிக்கா அதிபா் சிறில் ராமபோசா உள்ளிட்டோருடன் பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா்.

மேலும், பிரான்ஸ், இத்தாலி, இந்தோனேசியா, போா்ச்சுகல், நாா்வே, சிலி, அா்ஜென்டினா, எகிப்து, தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவா்களை சந்தித்து, இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது குறித்தும் அவா் விவாதித்தாா். 3 நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமா் மோடி கயானாவிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டு இந்தியா திரும்புகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments