முகப்பு
இந்தியா

அதிஷி, சஞ்சய் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி: தில்லி நீதிமன்றம்!

காங்கிரஸ் தலைவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 3 ஏப்ரல் 2025, 4:00 pm IST
தில்லி நீதிமன்றம்
பகிர்:

முன்னாள் முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீதான அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மி தலைவர்கள் இருவரும் வேண்டுமென்றே தீட்சித்தின் நல்லெண்ணத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் மனுத் தாக்கல் செய்தார்.

மேலும், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் அதிஷி, சிங் ஆகிய இருவரும் சந்தீப் தீட்சித் "பாஜகவிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஆம் ஆத்மி கட்சியைத் தோற்கடிக்கக் காங்கிரஸ் ஆளும் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது என்று குற்றம் சாட்டினர் என்று புகார் கூறப்பட்டது.

Advertisement

Advertisement

சந்தீப் தீட்சித் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகார் தில்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சந்தீப் தீட்சித் அளித்த புகாரை கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி பராஸ் தலால் விசாரிக்க மறுத்துவிட்டார்.

புகார்தாரரை அவதூறு செய்யும் வகையில் எந்த குற்றச்சாட்டும் கூறப்படவில்லை என்று கருதுவதாகவும், இந்த நீதிமன்றம் விசாரணையை ஏற்க மறுக்கிறது என்றும் அவர் கூறினார். ‘

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments