விபத்துக்குள்ளான டேங்கர் லாரி.  
இந்தியா

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்து: பலி 3ஆக உயர்வு

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், மண்டியாலா அடா அருகே ஹோஷியார்பூர்-ஜலந்தர் சாலையில் எல்பிஜி டேங்கர் லாரி மீது மற்றொரு வாகனம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மோதியது. இதில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் இரண்டு பேர் பலியாகினர்.

அவர்கள் டேங்கர் லாரி ஓட்டுநர் சுக்ஜீத் சிங் மற்றும் மண்டியாலா கிராமத்தைச் சேர்ந்த பால்வந்த் ராய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 21 பேர் காயமடைந்தனர். தீ வேகமாக பரவியதால் அருகிலுள்ள சுமார் 15 கடைகள் மற்றும் 4 முதல் 5 வீடுகள் தீக்கிரையாகின. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டன.

கிரிக்கெட் மட்டைக்காகச் சண்டை: 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற பத்தாம் வகுப்பு மாணவன்!

படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து பஞ்சாப் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் படுகாயமடைந்த தர்மிந்தர் வர்மா (28), அமிர்தசரசில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட இருந்தபோது வழியிலேயே பலியானார்.

இதையடுத்து இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே டேங்கர் லாரி விபத்தி பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் முதல்வர் பகவந்த் மான் சனிக்கிழமை அறிவித்தார்.

The death toll in the LPG tanker fire incident rose to three after one more person succumbed to burn injuries, police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்திகிராம பல்கலை.யில் ஓணம் கொண்டாட்டம்

பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக் கூட நீக்க விடமாட்டோம்: முதல்வா் திட்டவட்டம்

வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழா: யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா!

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக மாறிய ‘வாக்குத் திருட்டு’

பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்!

SCROLL FOR NEXT