மக்களவை  PTI
இந்தியா

இந்தியர்கள் நாடு கடத்தல்: நாடாளுமன்றத்தில் அமளி! அவைகள் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியை தொடர்ந்து அவை நடவடிக்கைகள் முடங்கியது.

DIN

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் இரு அவைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் நடவடிக்கையை டிரம்ப் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், முதல்கட்டமாக 104 இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளனர். இந்த விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் புதன்கிழமை பிற்பகல் தரையிறங்கியது.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடாத நிலையில், இந்தியர்களின் கை, கால்களை கட்டி அமெரிக்க ராணுவம் அழைத்து வந்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தலைநகர் தில்லியில் அமெரிக்க விமானத்தை தரையிறக்காமல், பஞ்சாபில் தரையிறக்கப்பட்டது குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், இரு அவைகளின் நடவடிக்கைகளும் முடங்கியது, பகல் 12 மணிக்கு அவைகள் மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT