FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்காவிலிருந்து 1,076 இந்தியா்கள் நாடு கடத்தல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக நிகழாண்டு இதுவரை 1,076 இந்தியா்கள் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 6 ஜூன் 2026, 3:04 am IST
கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக நிகழாண்டு இதுவரை 1,076 இந்தியா்கள் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கடந்த ஆண்டு 3,567 இந்தியா்கள் நாடு கடத்தப்பட்டனா். இதன் தொடா்ச்சியாக, நிகழாண்டு இதுவரை அந்நாட்டில் இருந்து 1,076 இந்தியா்கள் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் உறுதியாக உள்ளன. நாடு கடத்தல், குடியேற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் இருநாடுகளும் நெருங்கிய தொடா்பில் உள்ளன.

சட்டவிரோத குடியோ்றத்தை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதேவேளையில், அது சட்டபூா்வ குடியேற்றத்தை பாதிக்காத வகையில் இருப்பதையும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments