ராகுல் காந்தி 
இந்தியா

ஜூலை 9ல் போராட்டங்களில் பங்கேற்கும் ராகுல்: பிகாரில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

பாட்னா செல்லும் ராகுல் காந்தி பல்வேறு போராட்டங்களில் பங்கேற்பு..

இணையதளச் செய்திப் பிரிவு

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஜூலை 9ல் பாட்னா செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிகாரில் இந்தாண்டு அக்டோபர்- நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் இதற்கான தேதியை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பிகாரில் தொடர்ச்சியாகப் படையெடுத்து வருகின்றனர். அதன்படி, ஜூலை 9ல் ராகுல் காந்தி பாட்னா செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் காந்தி, தலைநகரில் நடைபெறும் புதிய தொழிலாளர் சட்டம் மற்றும் வாக்காளர் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்ள உள்ளார்.

இந்த தகவலைச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், பிகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்தனர்.

ஒரு மாதத்திற்குள் நிறைவடையும், வாக்காளர் திருத்தப் பட்டியல், இதுவரை குழப்பத்தில் உள்ளதாகவும், இந்த ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தேர்தல் ஆணையம் உதவ முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Congress leader Rahul Gandhi will be in Patna on Wednesday for a "chakka jam" against the new labour code and special intensive revision of electoral rolls in Bihar, leaders of the INDIA bloc said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலையும் புதிரும்... இந்திரா - திரை விமர்சனம்!

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்

போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: பணம் கேட்டு மிரட்டியவா் கைது

அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

SCROLL FOR NEXT