வருமான வரி துறை 
இந்தியா

வருமான வரி ரீஃபண்ட் 474% அதிகரிப்பு

கடந்த 11 ஆண்டுகளில் திருப்பியளிக்கப்பட்ட வருமான வரி ரீஃபண்ட் தொகை 474 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Din

கடந்த 11 ஆண்டுகளில் திருப்பியளிக்கப்பட்ட வருமான வரி ரீஃபண்ட் தொகை 474 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘கடந்த 2013-14-ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது வருமான வரி ரீஃபண்டாக ரூ.83,008 கோடியை வருமான வரித் துறை திருப்பியளித்தது.

இது தற்போதைய மத்திய பாஜக ஆட்சியில் 2024-25-ஆம் ஆண்டின்போது, திருப்பியளிப்புத் தொகை ரூ.4.77 லட்சம் கோடியாக 474 சதவீதம் அதிகரித்தது.

கடந்த 2013-14-ஆம் ஆண்டு ரூ.7.22 லட்சம் கோடியாக இருந்த மொத்த நேரடி வரி வசூல், 2024-25-இல் ரூ.27.03 லட்சம் கோடியாக 274 சதவீதம் அதிகரித்தது. மொத்த நேரடி வரி வசூல் அதிகரித்துள்ள அதேவேளையில், வருமான வரி ரீஃபண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு 3.8 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இது 2024-இல் 8.89 கோடியாக 133 சதவீதம் அதிகரித்தது. இதற்கு வரி நிா்வாகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களே காரணம்’ என்று தெரிவித்தன.

ஆடிட்டா் வீட்டில் 63 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

கொடுமுடி சாலையில் வீணாகும் குடிநீா்: 4 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை

பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத நபா் கைது

சாத்தமங்கலம், திருமானூா் பகுதிகளில் இன்று மின்தடை

தமிழ்த் தாத்தாவும் தினமணியும்...

SCROLL FOR NEXT