முகப்பு
இந்தியா

ஏர் இந்தியா விபத்து நடந்த 4 நாள்களில் 112 விமானிகள் மருத்துவ விடுப்பு!

விமான விபத்து எதிரொலி: நூற்றுக்கணக்கான ஏர் இந்தியா விமானிகள் விடுப்பு

Updated On : 24 ஜூலை 2025, 7:01 pm IST
பகிர்:

அகமதாபாத் நகரில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விழுந்து தீப்பற்றிய விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன விமானிகள் பலர் விடுப்பில் சென்றிருப்பது அதிகரித்துள்ளது.

விமான விபத்துக்குப்பின் 112 விமானிகள் விடுப்பில் விடுமுறை எடுத்துள்ளனர். அவர்களுள் பெரும்பாலானோர் உடல்நிலை சரியில்லை என்பதையே காரணமாகச் சுட்டிக்காட்டி மருத்துவ விடுப்பு எடுத்துள்ளனர். இந்த தகவலை இன்று(ஜூலை 24) மக்களவை கூட்டத்தொடர் கேள்வி நேரத்தின்போது சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளீதர் மோஹோல் தெரிவித்தார்.

ஜூன் 16, 2025-இல் மொத்தம் 112 விமானிகள்(51 கமாண்டர்கள், 61 முதல்நிலை அதிகாரிகள்) மருத்துவ விடுப்பு எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

மேலும், இந்தியாவில் இயக்கப்படும் விமான நிறுவனங்களில் குறிப்பாக 5 விமான நிறுவனங்கள் நிகழாண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் 85, இண்டிகோ விமானங்களில் 62, ஆகாஷா ஏர் விமானங்களில் 28, ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் 8 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments