வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் 
இந்தியா

மேற்கு ஆசிய சூழல்: யுஏஇ, அா்மேனியா வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் பேச்சு

மேற்கு ஆசிய சூழல் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), அா்மேனியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் தொலைபேசி வாயிலாகஉரையாடினாா்.

Din

புது தில்லி: இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் மேற்கு ஆசிய சூழல் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), அா்மேனியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமை உரையாடினாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மேற்கு ஆசியாவின் கள நிலவரம் குறித்து யுஏஇ துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நாஹ்யானுடன் பேச்சுவாா்த்தை நடத்தினேன்.

அதேபோல் அா்மேனிய வெளியுறவு அமைச்சா் அராரத் மிா்சோயனிடமும் ஆலோசித்தேன். இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவது குறித்தும் விவாதித்தேன்’ எனக் குறிப்பிட்டாா்.

இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் கவலையளிப்பதாகவும் இருநாடுகளும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா தெரிவித்தது.

அதேநாளில் இஸ்ரேல் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சா்களுடன் தொலைபேசியில் பேசியதாக ஜெய்சங்கா் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT