பிரதிப் படம் ENS
இந்தியா

கர்ப்பிணிக்கு மருந்துக்கு பதிலாக ஆசிட்! மருத்துவமனை அலட்சியத்தால் பரபரப்பு!

மகாராஷ்டிரத்தில் மகப்பேறுக்காக சென்ற பெண்ணின் மீது தவறுதலாக திராவகம் செலுத்தியதால் பரபரப்பு

PTI

மகாராஷ்டிரத்தில் மகப்பேறுக்காக சென்ற பெண்ணின் மீது தவறுதலாக திராவகம் செலுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஜல்னா நகரில் அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக ஷீலா பலேராவெ என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பிரசவத்தின்போது, மருந்து என நினைத்து, திராவகத்தை பெண்ணின் வயிற்றுப் பகுதியில் மருத்துவர்கள் தேய்த்து விட்டனர்.

இதனையடுத்து, பெண்ணின் வயிற்றுப் பகுதியில் திராவகத்தால் தீக்காயம்போல ஏற்பட்டு, பாதிக்கப்பட்டார். இருப்பினும், நல்வாய்ப்பாக குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து, காவல் நிலையத்தில் அவரது கணவர் புகார் அளித்தார். புகாரையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், மருந்துகள் வைக்கும் தட்டில், திராவகத்தையும் மருத்துவமனையை சுத்தம் செய்யும் பணியாளர் தவறுதலாக வைத்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.எஸ். படேல் கூறினார்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT