ENS
இந்தியா

ரூ. 36,000 கோடி போதைப்பொருள் வழக்கில் 2,000 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகை!

6,016 கிலோ தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 2,000 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

DIN

அந்தமான் தீவு அருகே ரூ. 36,000 கோடி போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

அந்தமான் கடல் பகுதியில் பாரன் தீவு அருகே கடந்தாண்டு நவம்பர் மாதம், போதைப்பொருளுடன் சென்ற மியான்மர் கும்பலின் மீன்பிடி படகு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்திய கடற்பரப்பை நோக்கி வந்தது.

இந்த நிலையில், ரூ. 36,000 கோடி மதிப்பிலான 6,016 கிலோ தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் படகில் இருப்பது தெரிய வந்தது. செயற்கைக்கோள் தொலைபேசிகள், ஜிபிஎஸ் சாதனங்கள் உள்பட பல மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

படகில் இருந்த மியான்மரைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மியான்மர் கும்பலுக்கு எதிராக 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவைக்கு மோடி வருவாரா? வந்தால் நரவணே நூலை பரிசளிப்பேன்! ராகுல்

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்? - கனிமொழி பதில்!

வாக்காளரை துன்புறுத்தாதீர்; ஆதாரை ஏற்றுக்கொள்க: உச்ச நீதிமன்றத்தில் மமதா வாதம்

முக்கியத்துவம் பெறா நேரத்துக்கு மாற்றப்படும் ஆடுகளம் தொடர்!

மமதா அரசு மத்திய திட்டங்களைத் தடுக்கிறது: பாஜக எம்பி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT