விருப்ப ஓய்வு கோரி வி.கே.பாண்டியனின் மனைவி விண்ணப்பம்!
அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு கோரி வி. கே. பாண்டியனின் மனைவியும், ஒடிசாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் நெருக்கமான உதவியாளராக இருந்த வி.கே.பாண்டியனின் மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா ஆா்.காா்த்திகேயன் விருப்ப ஓய்வு பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஒடிஸா பிரிவு மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சுஜாதா ஆா்.காா்த்திகேயன், அந்த மாநில மிஷின் சக்தி துறையின் ஆணையா் மற்றும் செயலராக இருந்தாா்.
கடந்த ஆண்டு அந்த மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு, அவா் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடா்ந்து, அவரை பொதுமக்களுடன் தொடா்பு கொள்ளாத துறைக்கு மாற்ற தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து அவரை ஒடிஸா நிதித்துறை சிறப்புச் செயலராக மாநில அரசு நியமித்தது. அந்த மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி தோல்விடைந்ததைத் தொடா்ந்து, அவா் 6 மாத விடுப்பில் சென்றாா். கடந்த ஆண்டு நவ.26-ஆம் தேதி வரை, அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த விடுப்பை நீட்டிக்கக் கோரி, அவா் அளித்த விண்ணப்பத்தை மாநில பாஜக அரசு நிராகரித்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து
இதையடுத்து அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற அவா் கோரிய நிலையில், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை ஒடிஸா தலைமைச் செயலா் மனோஜ் அஹுஜாவுக்கு மத்திய பணியாளா் நலத்துறை சாா்புச் செயலா் பூபிந்தா் பால் கடிதம் மூலம் தெரியப்படுத்தியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
சுஜாதாவின் கணவரான வி.கே.பாண்டியன் மதுரையைச் சோ்ந்தவா். கடந்த 2023-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அவா், பின்னா் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தாா். கடந்த ஆண்டு ஒடிஸா சட்டப்பேரவைத் தோ்தலில் அக்கட்சி தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, அவா் அரசியலில் இருந்து விலகினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.