முதல்வர் ரேகா குப்தா Center-Center-Delhi
இந்தியா

விளையாட்டு வீரர்களுக்குத் தில்லி அரசு உரிய வசதிகள் வழங்கும்: முதல்வர்!

விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாஜக அரசு வழங்கும்..

DIN

தில்லி விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாஜக அரசு வழங்கும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.

தல்கடோரா மைதானத்தில் தில்லி விளையாட்டு-2025ஐ முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது,

முந்தைய அரசின் கீழ் தில்லி விளையாட்டு வீரர்கள் தில்லியை விட்டு வெளியேறிப் பிற மாநிலங்களில் பதிவு செய்ய வேண்டியிருந்தது. ஆனால், தற்போது தில்லி அரசு தில்லி விளையாட்டு கவுன்சில் மூலம் அவர்களுக்கான வசதிகளை ஏற்பாடு செய்து வருகிறது.

தில்லியில் உள்ள இளைஞர்கள், மாணவர்களுக்கு தில்லி அரசு அனைத்து வசதிகளையும் வழங்கும், இதனால் அவர்கள் மீண்டும் தங்கி நகரத்திற்குப் பெருமை சேர்க்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

தில்லி விளையாட்டு பல்கலைக்கழகத்தைத் திறக்கும் திட்டத்தை முந்தைய அரசு தடுத்ததாகக் குற்றம் சாட்டிய அவர், தனது அரசு அதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT