முகப்பு
இந்தியா

வங்கிகளில் ரூ. 36,014 கோடி மோசடி! முந்தைய ஆண்டைவிட 3 மடங்கு அதிகம்!

இந்திய வங்கிகளில் 2024 - 2025 நிதியாண்டில் நடந்த மோசடிகள் குறித்த ரிசர்வ் வங்கியின் தகவல்

Updated On : 29 மே 2025, 9:34 pm IST
பகிர்:

இந்திய வங்கிகளில் 2024 - 2025 நிதியாண்டில் நடந்த மோசடிகள் குறித்து ரிசர்வ் வங்கியின் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி தெரிவித்ததாவது, 2024 - 25 நிதியாண்டில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் மொத்தம் 23,953 மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. 2023 - 24 ஆண்டில் 36,060 ஆக இருந்த நிலையில், தற்போது மோசடி எண்ணிக்கை குறைந்துள்ளது.

இருப்பினும், மோசடி செய்யப்பட்ட மதிப்பு, முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும். 2023 - 24 நிதியாண்டில் வங்கிகளில் மோசடி மதிப்பு ரூ. 12,230 கோடியாக இருந்த நிலையில், 2024 -25 நிதியாண்டில் ரூ. 36,014 கோடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

23,953 வங்கிகளில் தனியார் வங்கிகளில் 14,233 மோசடிகளும், பொதுத்துறை வங்கிகளில் 6,935 மோசடிகளும் நடந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments