ஜெய்ப்பூர்: 2 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஜெய்ப்பூரில் 2 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தின.
ஜெய்ப்பூரில் 2 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தின.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள மெட்ரோ நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
மிரட்டல் தொடர்பாக தகவல் கிடைத்ததும் போலீஸார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர்.
Advertisement
Advertisement
பனிபார்க்கில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கும், ஜோதி நகரில் உள்ள குடும்ப நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மற்றும் மோப்ப நாய் படைகள் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர்.
தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்
முழுமையான சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இருப்பினும் இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலங்களில் இதேபோன்ற பல சம்பவங்கள் ராஜஸ்தானில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.