பூரண் குமார் படம் | ஐஏஎன்எஸ்
இந்தியா

ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் தற்கொலை விவகாரம்: பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் தகனம்!

பிரேதப் பரிசோதனை முடிந்தது! உடல் தகனம்!

இணையதளச் செய்திப் பிரிவு

மறைந்த ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் தகனம் செய்யப்பட்டது. ஹரியாணா காவல் பயிற்சி மைய ஐஜி பதவி வகித்த பூரண் குமாா் (52) கடந்த செவ்வாய்க்கிழமை சண்டீகரில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன்பாக பூரண் குமாா் எழுதிய 8 பக்க கடிதத்தில் ஹரியாணா காவல் துறைத் தலைவா் (டிஜிபி) சத்ருஜித் கபூா் மற்றும் ரோத்தக் எஸ்பி நரேந்திர பிஜாா்னியா உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் தன்னை ஜாதியரீதியாக பாகுபடுத்தி துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளாா். இந்த வழக்கை விசாரிக்க சண்டீகா் ஐஜி புஷ்பேந்திர குமாா் தலைமையில் 6 உறுப்பினா்களைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

இதனிடையே, பூரண் குமாா் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளின் பெயா்களை முதல் தகவல் அறிக்கையில் சோ்த்து நடவடிக்கை எடுக்கும் வரை உடற்கூறாய்வு மேற்கொள்ள அவரது குடும்பத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதனால் அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்வதில் இழுபறி நீடித்தது. இந்த நிலையில், இன்று(அக். 15) அவரது குடும்பத்தின் ஒப்புதலுக்குப் பிறகு உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் தகனம் செய்யப்பட்டது.

Haryana IPS officer Y Puran Kumar to be cremated in Chandigarh today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழை நின்றது: பாகிஸ்தான் வெற்றிபெற 113 ரன்கள் இலக்கு!

பாக். போலியோ பணியாளர்கள் மீது மீண்டும் தாக்குதல்! காவல் அதிகாரி சுட்டுக்கொலை!

புதுவைக் கடலில் டால்பினுடன்... சஞ்சனா திவாரி!

எனதருமை ரத்தங்களே... அரசன் புரோமா பார்த்த சிம்பு உற்சாகம்!

கரூர் கூட்டநெரிசல் பலி: விஜய் தாமதமே காரணம்!: முதல்வர் | செய்திகள்: சில வரிகளில் | 15.10.25

SCROLL FOR NEXT