இந்தியா

தேசியவாதக் கொள்கையின் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தான் வெற்றி பெற்றது தேசியவாதக் கொள்கையின் வெற்றி என சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தான் வெற்றி பெற்றது தேசியவாதக் கொள்கையின் வெற்றி என சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில்,‘குடியரசு துணைத் தோ்தல் கொள்கை ரீதீயான மோதல் என எதிா்க்கட்சிகள் தெரிவித்து வந்தன. அந்த வகையில் தற்போது தேசியவாதக் கொள்கையே வெற்றி பெற்றுள்ளது. இது ஒவ்வோா் இந்தியருக்குமான வெற்றி. ஜனநாயகத்தில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சி என இரண்டும் முக்கியமானவை. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை.

2047-இல் வளா்ச்சியடைந்த பாரத இலக்கை அடைய வேண்டுமெனில் அனைத்தையும் அரசியலாக்குவதை விடுத்து, நாட்டின் மேம்பாட்டில் மட்டுமே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

குடியரசு துணைத் தலைவராக எனது பணியை மிகச் சிறப்பாக மேற்கொள்வேன் என உறுதியளிக்கிறேன் என்றாா் அவா்.

நேபாளத்தில் அமைதி திரும்பியதா?

தனியார் மருத்துவமனைகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை! தொடக்கி வைத்தார் மா. சுப்பிரமணியன்

3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! வங்கி, ஐடி பங்குகள் உயர்வு!

விஜய் ஆண்டனி - சசி படத்தின் பெயர்!

புதுச்சேரி காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT