மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு
மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக...
மனிதர்களை இரண்டாவது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் விதமாக, ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தெருநாய்கள், மனிதர்களை இரண்டாவது முறை கடித்தால், அந்த நாய்கள் ஆயுள் முழுவதும் விலங்குகள் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெருநாய்கள் முதல்முறையாக மனிதரை கடித்தால், அந்த நாய்களை 10 நாள்கள் விலங்குகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டு, கருத்தடை செய்து பின்னர் விடுவிக்கப்படும். தொடர்ந்து, நாய்களுக்கு மைக்ரோ சிப்பும் பொருத்தப்படும்.
Advertisement
Advertisement
மீண்டும், அந்த நாய்கள் மனிதர்களை இரண்டாவது முறையாக கடித்தால், ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்குப் பிறகும் யாரவது தெருநாய்களைத் தத்தெடுக்க வேண்டுமென்றால், ’இனி நாய்களை தெருவில் விடமாட்டோம்’ என்று தெரிவித்து பிரமாணப் பத்திரம் ஒன்றை சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் இறந்த குழந்தையின் உடலை தூக்கிச்சென்ற தெரு நாயால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த புதிய முயற்சியை உத்தரப் பிரதேச அரசு எடுத்துள்ளது.
Stray dogs that bite humans a second time are sentenced to life imprisonment
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.