முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதம்: மக்கள் போராட்டம்

ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 1:47 PM
Representational - கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 1:30 PM

ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டம், கம்பால் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் கையை மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தியுள்ளனர். இதையறிந்ததும் உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றவாளிகளை அடையாளம் காண, அருகிலுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

துணை கோட்டாட்சியர் ஹரி சிங் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தார். குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

summary

A statue of B R Ambedkar was found damaged in Khambal village of Rajasthan's Sirohi district, triggering protests by locals, police said on Sunday According to officials, the hand of the statue was found damaged this morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.